அழகான வரிகள்

அழகான வரிகள்

கட்டாயம் வாசியுங்கள்..

🖋️🖋️🖋️
அஷ்-ஷேக் மபாஸ் (ஹாமிதீ) 

வாழ்க்கை என்பது நீ இவ்வுலகை விட்டும் பிரியும் வரை அல்ல.. 
மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு..
ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. 
ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. 
சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. 
நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. 
புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்..
வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. 
அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. 
உன் முகம் உனக்கு பிடிக்கும்..! 
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. 
உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. 
வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை...
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை.. 
இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

🖋️🖋️🖋️
அஷ்-ஷேக் மபாஸ் (ஹாமிதீ)

No comments:

Post a Comment